Tuesday, 23 June 2020

பாக்.வீரர்கள் 10 பேருக்கு கொரோனா; சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 10 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூலை-ஆகஸ்ட்) பங்கேற்கிறது. இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி தேர்வு செய்யப்பட்டது. இந்த வீரர்களுக்கு அவரவர் வீடுகளில் முதற்கட்டமாக கொரோனா சோதனை நடந்தது. இதில் இளம் வீரர்கள் Haider Ali(19), Haris Rauf(26) மற்றும் Shadab Khan(21) என மூன்று பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதனிடையே நேற்று நடத்தப்பட்ட சோதனையில் Fakhar Zaman, Imran Khan, Kashif Bhatti, Mohammad Hafeez, Mohammad Hasnain, Mohammad Rizwan மற்றும் Wahab Riaz என மேலும் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தவிர உதவிப் பணியாளர் ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் Shahid Afridi அவர்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இது பாகிஸ்தான் ரசிகர்கள் மாத்திரமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே லாகூரில் உள்ள வீரர்களிடம் நாளை இரண்டாவது கட்ட சோதனை நடக்கும். இதன் முடிவில் புதிய வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்படும். இதன் பின் பாகிஸ்தான் வீரர்கள் 28ம் திகதி இங்கிலாந்து கிளம்பிச் செல்ல உள்ளனர். அங்கு விமான நிலையத்தை அடைந்ததும் மறுபடியும் சோதனை செய்யப்படுவர். அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் உட்பட பலரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால், இங்கிலாந்து தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 
 -✍S.M.Niflan-

Friday, 24 April 2020

கொரோனாவின் தாண்டவம்.

கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலகமே நடுங்கி நிற்கின்றது. ஒவ்வொரு மானிடனின் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது. ஊரடங்கு எனும் இக்காப்பு நடவடிக்கை நோயை கட்டுப்படுத்தினாலும் எங்களின் வயிற்றை காயவைக்கும் கருவியாக அமைகிறது. எத்தனையோ குடும்பங்கள் அன்றாடம் செய்யும் வேலையையும் அதன் வழியால் வரும் கூலியையும் வைத்தே வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றார்கள். அதற்கே தடை ஏற்படும் போது செய்வதறியாது நடுக்காட்டில் தொலைந்த குழந்தை போல தள்ளாடி கொண்டிருக்கின்றோம். சற்று கண்மூடுகையில் ‘பக்கத்து ஊரிலேயே வந்திடுச்சு’ எனும் தகவல் நித்திரையையும் சேர்த்து நிம்மதியையும் கலைத்து விட்டது. அது என்ன மனிதனை விழுங்கும் பிரம்மாண்டமான படைப்பா? ஒரு ஊருக்குள் வந்தால் ஒவ்வொருவரையும் நாசம் செய்துவிட்டு அடுத்து ஊருக்கு போகும் என்பதற்கு ஆனால் அவ்வாறே நிகழ்கிறது. வறுமையின் கொடுமையால் தாய்மார்கள் பேச்சை கேட்பதில்லை. பாதையில் எந்த மரக்கறிகாரன் சென்றாலும் அழைத்து விலை கேட்கின்றனர். வாழைப்பூ, ஈரப்பலா, வெள்ளரி என்று மலிவானதையெல்லாம் வாங்கி நெஞ்சோடு அணைத்து இன்று தம் குடும்பத்துக்கு பசியைப்போக்கலாம் என்று ஆனந்தப்படுகின்றனர். இதற்கு நேர்மாறாக வசதிபடைத்தவர்கள் சொகுசு வீடுகளில் வேண்டிய விரும்பிய உணவையும் வசதியையும் விடுமுறையாகவே கழித்து வருகின்றனர். யாரைத்தான் குற்றம் சொல்வது? இயற்கையையும் கடவுளையும் அவமதித்தால் ஒரு நாள் சீற்றம் கொள்ளத்தானே செய்யும். இந்த நோயானது பல கஸ்டங்களை தந்த அதே வேளை சில படிப்பினைகளையும் தந்துள்ளது. நவநாகரீக கலாசாரத்தை மறக்கடித்துள்ளது. பண்பாடுகளுடனும், சமூக விலகளுடனும், வீண்விரயத்தை தவிர்க்கவும், சுத்தத்தை பேணவும் என பல பாடங்களை கற்று தந்துள்ளது. படிக்காதவர்களை விடவும் படித்த முட்டாள்கள் தான் கல் நெஞ்சம் படைத்தவர்கள் என்பதை உறுதிசெய்யும் வகையில் ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று அவர்களின் பெருமையை உலகத்திற்கு காட்டுவதற்காகவே மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுகின்றனர். ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘இன்று இந்த மக்கள் தேவையானவர்களே தவிர பிச்சைக்காரர்கள் அல்ல’ வீட்டிலேயே இருப்பது கஸ்டம் தான். அது ஒரு வகையான மனச்சோர்வை உண்டாக்குகிறது. உணவு, வேலை, சலிப்பு தட்டும் போது உறக்கம் என்பதை தாண்டி ஒன்றுமே இல்லை என்ற நிலையில் உள்ளோம். கனவில் கூட மருத்துவர்களே வருகின்றனர். கண்கள் முழுதும் கலக்கம் பட்டிணியான வயிறு வலியுடன் பொலிஸிடம் அடிவாங்கினாலும் பரவாயில்லை என்று வேலைதேடி திரியும் தந்தைமார்கள் இன்று நினைக்கையில் கண்களில் நீர் ததும்புகிறது. இந்த கொரோனாவும் அதன் விளைவும் நமது உலக நியதியை மாற்றுவதாகவும் பொருளாதாரம் பற்றிய நமது கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அமைந்து விடக்கூடும். அது போல இந்த அடி மனித வரலாற்றை மீள திருத்தி எழுதுகின்ற மூன்றாம் உலகப்போராக அமைந்து விடலாம். அணுகுண்டால் முடியாததை அணு அளவில்லாத நீ அழகாய் செய்து முடித்தாய்! கொரோனாவே.... இதிலிருந்து மீள் எழுவோம்.

Wednesday, 8 January 2020

🇦🇺🔥அவுஸ்திரேலிய காட்டுத் தீயினால் 10,000 ஒட்டகங்­களை கொல்வதற்கு உத்த­ரவு🔥🐪

அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ வேக­மாகப் பரவி வருகின்ற நிலையில் முழு நாடுமே திண்டாட்டத்தை எதிர்கொண்­டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டிலுள்ள ஒட்டகங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்­களில் அதிகளவு நீரை அருந்துவதைத் தடுத்து நிறுத்த அங்குள்ள 10,000 க்கு மேற்பட்ட ஒட்டகங்களைக் கொல்லும் நடவடி­க்கை இன்று புதன்கிழமை முதல் ஆரம்­பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அனன்கு பிட்ஜன்ட்ஜட்ஜாரா யன்குனிட்ஜட்­ஜாரா பிராந்தியத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் ஒட்டகங்களைக் கொல்வதற்கான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதற்காக உலங்குவானூர்திகளில் உத்தி­யோகபூர்வமாக துப்பாக்கிச் சூட்டை நடத்துபவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டகங்களைக் கொல்லும் இந்த நடவ டிக்கை சுமார் 5 தினங்களுக்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

☀️சூரியனுக்கு மிக அருகில் பூமி!🌍 இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்🇱🇰

தற்போதைய நாட்களில் பூமியானது சூரியனுக்கு அருகாமையில் பயணிப்பதாக இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார். இதனால், நாடு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலை நிலவுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்துவதோடு, வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இதேவேளை இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகள் பூமியின் மத்திய கோட்டுக்கு அருகாமையில் இருப்பதால் சூரியனின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Tuesday, 7 January 2020

🇺🇸அமெரிக்க படைவீரர்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது ஈரான்🇮🇷

ஈரான் இராணுவத் தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க படை வீரர்கள் அனைவரையும் ஈரான் அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே ஆயுத தவிர்ப்பு விவகாரம், யுரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக காரணமாக அசாதாரண சூழல் நிலவிவருகிறது. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை(03.01.2019) அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் இரண்டாவது சக்தி வாய்ந்த மனிதரான இராணுவத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை பழி தீர்ப்போம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இரு நாடுகள் இடையே போர் மூளும் அபாயம் நிலவுகின்றது. இந்நிலையில் ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதை அடுத்து அனைத்து அமெரிக்க படைகள் மற்றும் இராணுவ ஊழியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவிக்கும் சட்டமூலம் இன்று ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை வல்லரசு நாடுகளுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 06 வல்லரசு நாடுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின. அணுசக்தி ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்க வேண்டும் அதற்கு பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதாரத் தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப் பெற வேண்டும். ஈரானுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். மேலும் ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் வெடித்தது அதனைத் தொடர்ந்து அணுசக்தி. அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை புறக்கணிப்பதாக ஈரான் படிப்படியாக அறிவித்து வந்தது. அதன் படி 5 நிபந்தனைகளில் 4 நிபந்தனைகளை நிராகரித்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டார். இதனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Monday, 6 January 2020

🌃இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்கவும்!😴

இனியவர்களே! வீட்டை பரிசோதிக்கவோ, அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில் எழுந்திருக்கும் ஒவ்வொரு நபரும் மூன்றரை நிமிடங்கள் கவனிக்க வேண்டும். எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில் திடீரென காலமானார். "அவர் ஏன் திடீரென்று இறந்தார்?" காரணம்......? நீங்கள் கழிப்பறைக்குச் செல்ல இரவில் எழுந்தவுடன், அது பெரும்பாலும் விரைவாக நடக்கும். நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது. "மூன்றரை நிமிடங்கள்" ஏன் மிகவும் முக்கியம்? நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் ஆசை உங்களை எழுப்பும்போது, ​​ திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும், மேலும் இது இரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது. மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது, அவை யாதெனில்?: 1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள். 2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்; 3. உங்கள் கால்களைக் குறைத்து, படுக்கையின் விளிம்பில் அரை நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள். மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்த சோகைக்கு ஆளாகாது, உங்கள் இதயம் பலவீனமடையாது, இது வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் இது நிகழலாம்.

Sunday, 5 January 2020

🌞2020 இல் செயற்கைச் சூரியன்🇨🇳

சீனாவின் புதிய முயற்சியான செயற்கை சூரியன் அடுத்த ஆண்டு தயாராகிவிடும் என கூறப்படுகிறது. புதுமையான முயற்சிகளை எடுப்பதில் சீன நாட்டினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் செயற்கை மழை, செயற்கை நிலவு என்ற வரிசையில் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிளவுட் சீடிங் எனப்படும் மேக விதைத்தல் முறையில்தான் இது போன்ற புதுமைகள் உருவாக்கப்படும். இதற்கான முயற்சியை சீன நாட்டை சேர்ந்த நேஷனல் நியூக்ளியர் கார்பரேஷனில் பணியாற்றி வரும் அறிவியல் அறிஞர்கள் செயற்கை சூரியனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் Experimental Advanced Superconducting Tokamak என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இந்த பணி தற்போது முடிவடையும் நிலையிலுள்ளது. இரு ஹைட்ரஜன் அணுக்களை இணைப்பதன் மூலம் மிகப் பெரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நிகழ்வு அணுக்கரு இணைவு ஆகும். இதனால்தான் சூரியனில் ஒளியும் வெப்பமும் ஒரே நேரத்தில் வெளியேறுகிறது. அணுக்கரு இணைவை செயற்கையாக உருவாக்கும் வகையில் செயற்கை சூரியன் அமையும். டோக்காமாக் ரியாக்டர் என்ற பெயரில் அணுக்கரு உலையை சீனர்கள் உருவாக்கி அணுக்கரு இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அணுக்கரு இணைப்பு எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதுவரை சூரியனும் ஒளிரும். பொதுவாக சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால் செயற்கை சூரியனின் வெப்பநிலையோ 100 மில்லியன் டிகிரி செல்சியஸாக இருக்கும். HL- 2M Tokomak என இந்த செயற்கை சூரியனுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூரியன் 2020-ஆம் ஆண்டு ஒளிரும் என சீன அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் 2006-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. சூடான பிளாஸ்மாவை தக்க வைக்க சக்திவாய்ந்த காந்தப்புலமே டோகோமாக் கருவியாகும். இந்த செயற்கை சூரியனில் இந்த கருவி பயன்படுத்தப்படுவதால் டோகோமாக் என பெயரிடப்பட்டுள்ளது.

பாக்.வீரர்கள் 10 பேருக்கு கொரோனா; சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 10 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்...