Thursday, 12 December 2019

போதைப் பொருள் விழிப்புணர்வு செயலமர்வு-2019


போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கு கடந்த தினம் (10.12.2019) செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது நிகழ்ச்சி  அதிகாரியாகிய ரஹீம் மற்றும் உதவி நிகழ்ச்சி  அதிகாரி கோடீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக ஊடகத் துறை விரிவுரையாளர்கள் மற்றும் ஊடகத் துறை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் போதைப் பொருள் என்பது யாது? போதைப் பொருளிற்கு எவ்வாறு அடிமையாகின்றனர் எனவும் போதைப் பொருள் பாவனையால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் என்பன இந் நிகழ்வின் போது கூறப்பட்டது.

இலங்கைக்கு போதைப் பொருட்களினால் கிடைக்கின்ற வருமானம் குறைவாக உள்ள போதிலும் விநியோகிப்பது கவலையான ஒரு விடயமாக உள்ளது. இதனால் பாமர மக்கள்  அதிகம் பாதிக்கப்படுவதுடன் அதிகளவிலான பணத்தை போதைப் பொருளிற்கு செலவிடுகின்றனர் எனவும் விளம்பரங்கள் போதைப் பொருள் பாவனையை அதிகம் தூண்டுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இப் போதைப் பொருள் பாவனையை தடுக்க ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில்  ஏற்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை எனவும் குறிப்பிட்டார்.

Friday, 6 December 2019

நினைவுப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும்.

நினைவுப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும்.

மூத்த ஊடகவியலாளரான அமரர் பி.எஸ். பெருமாள் அவர்களின் 31ம் நாள் நினைவுப் பிரார்த்னையும் அஞ்சலி நிகழ்வும் இன்று 5.12.2019 வியாழக்கிழமை ராஜா சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது. 

இவ் நினைவுப் பிரார்த்தனையானது  ஜோசப் பாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இவ் பிரார்த்தனையில் அன்னாரின் குடும்பத்தினர் ஊடகவியலாளர்கள் யாழ்.பல்லைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராம் ஊடக விரிவுரையாளர்கள் ஊடக மாணவர்கள் அன்னாரின் நண்பர்கள் உறவினர்கள் எனப்பலரும் இவ் நினைவுப் பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்கானஅஞ்சலியும் செலுத்தப்பட்டது .

ஊடகத்துறையில் பலதரப்பட்ட பணிகளை ஆற்றி வெவ்வேறுபட்ட அடைமொழிகளையும் பட்டங்ளையும் பெற்ற பெருமாள் அவர்களது ஊடகத்துறை சார்ந்த பணிகள் அவரது செயற்பாடுகள் மற்றும் அன்னாருடனான அனுபவங்கள்   தொடர்பான ஊடகவியலாளரது கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது. 

அன்னாரது நினைவுகளை கூறும் வகையில் பெருமாளின் பதிவுகள் எனும் நூலினை ஈஸ்வரிபெருமாள் அவர்களால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது. அன்னாரின் உயிர் உடலை விட்டு பிரிந்திருந்தாலும் ஊடகத்துறை சார்ந்த அவரது பணி என்றுமே மறைவதில்லை.

Thursday, 5 December 2019

சுகாதாரமான நகரத்தைக் கட்டியெழுப்புதல்

சுகாதாரமான நகரத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை.

உலக சுகாதார ஸ்தாபன இலங்கை தலைமை காரியாலயம், வடமாகாண சுகாதார திணைக்களம் மற்றும் சமுதாய குடும்ப மருத்துவ துறை, மருத்துவ பீடம் யாழ்ப்பாணம் போன்றவற்றின் ஏற்பாட்டின் மூலம் "ஆரோக்கியமான யாழ் நகரை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்" என்ற தொணிப்பொருளில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை ஒன்று 03.12.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00  மணி முதல் மதியம் 3.00 மணி வரை வலம்புரி விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.


இவ் நிகழ்வினை 10.00 மணியளவில் மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் குமரேந்திரன் அவர்கள் ஆரம்பித்து வைத்ததுடன், அவருடைய கருத்தினையும் முன்வைத்தார். அவையாவது, ஓர் சுகாதாரமான வாழ்வினை வாழவும், ஆரோக்கியமான நகரை கட்டியெழுப்பவும் எவை செய்ய வேண்டும் . அதனை எவ்வாறு மக்களிடம் போய் சேர்ப்பது  இதை செய்வது ஊடகவியலாளர்களான உங்களின் கடமை என்றும்  தனது கருத்தினை அழுத்தமாக பதித்திருந்தார். 

இவரைத் தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையின்   சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் துவாரகா அவர்கள் மாசடைந்த, அடைகின்ற சூழல் சார் புகைப்படங்களை திரையிட்டு  எமது யாழ் நகரம் எவ்வாறு செல்கிறது இதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் குறிப்பிட்டார். ஆகவே திண்மக்கழிவுகளை முறையாக      அகற்ற வேண்டும் எனவும் ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொண்டாலே முழு நகரையும் சுகாதாரமான ஆரோக்கியமான நகரமாக கட்டியெழுப்ப முடியும் என்ற கருத்து இவரால் முன்வைக்கப்பட்டது.

மற்றுமொரு மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் குமரன் அவர்கள் ஒரு சுகநல வைத்தியசாலை எனும் முகப்பில் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இவ் வைத்தியசாலை காணப்பட்டால் பல  ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும் எனவும் கலந்துரையாடல் மூலம் பல்வேறு வழிகளை குறிப்பிட்டு இருந்தார்.

இவ்வாறு ஓர் ஆரோக்கியமான நகரத்தை கட்டியெழுப்ப நாம் என்ன செய்ய வேண்டும் அதற்கான வழிகாட்டுதல் செயலமர்வாக இது அமைந்திருந்தது.
இந் நிகழ்விற்கு ஊடகவியலாளர்கள்,யாழ்  பல்கலைக்கழக ஊடகத்துறை 2ஆம் வருட மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tuesday, 3 December 2019

கனலி சஞ்சிகை வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மூன்றாம் வருட மாணவர்களின் கனலி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு 02.11.2019 அன்று யாழ்.பல்கலைக்கழக நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி.கே.சுதாகர் அவர்களும் கலந்துகொண்டனர்.

கனலி சஞ்சிகையின் முதற் பிரதியை சிரேஷ்ட ஊடகவியலாளர் இராதேயன் அவர்கள் வெளியிட்டு வைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Monday, 2 December 2019

"கனலி"மாணவர் சஞ்சிகை வெளியீடு - 2019 

யாழ்.பல்கலைக்கழகத்தில்   "கனலி"மாணவர் சஞ்சிகை வெளியீடு - 2019 

யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின்  3ஆம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் 'கனலி' மாணவர் சஞ்சிகை வெளியீடு நிகழ்வானது  யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் 02.12.2019 (இன்று ) பி.ப 2மணி தொடக்கம் 4மணி வரை யாழ் பல்கலைக்கழக நூலகக் கலையரங்கில் இடம்பெறவுள்ளது. 


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட பேராசிரியர் க. கந்தசாமி (யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி) அவர்களும் சிறப்பு விருந்தினராக  கலாநிதி கே.சுதாகர் ( பீடாதிபதி , கலைப்பீடம் , யாழ் பல்கலைக்கழகம் ) அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.


"நல்லவை  சுடர்விட தீயவை பொசுங்கிட" எனும் தொனிப்பொருளில் ஊடகக் கற்கைகள் துறையின் மூன்றாம் வருட  மாணவர்களால் உருவாக்கப்பட்ட  கனலி சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களை தாங்கியே வெளிவருகின்றது.  மாணவர்களின் அறிக்கையிடல் நுட்பங்களை செய்முறை ரீதியாக வெளிக்கொணரும் வகையில் இச்சஞ்சிகை ஆக்கம் பெற்றுள்ளது. 

யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள்
இன்று இடம்பெறவுள்ள இச்சஞ்சிகை வெளியீட்டு  நிகழ்வுக்கு அனைத்து மாணவர்களையும் சமூக ஆர்வலர்களையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.

டெங்கு

டெங்கு நோயானது ஈடிஸ் என்னும் கொசுவினால் பரவக் கூடிய ஒரு வைரஸ் கிருமியால்  டெங்கு நோய் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு மற்றைய கொசுக்களைப் போலல்லாமல் பகல் வேளைகளில் தான் கடிக்கின்றது.இதனால் தான் அதிகம் இவ் நோய் பரவுகிறது.

 உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இவ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர். ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இவ்  காணப்படுகிறது. ஆகவே எமது நாட்டில் டெங்கு காய்ச்சின் தாக்கம் குறித்து பார்ப்போம்.

இங்கு கடந்த வருடத்தில் ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்த டெங்கு காய்ச்சல் தாக்கமானது தற்போது தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. நாட்டில் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை இவ் வருடத்தில் அதிகமாகி உள்ளது. என சுகாதார அமைச்சு அதிகாரிகள் கூறுகின்றனர். இவ் வருடத்தின் முதல் நான்கு மாத காலத்தில் இன் நோயினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது கடந்த வருடம் 
முழுவதுமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகமானது என்று சுகாதார அமைச்சின் அறிக்கை  ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே இவ் வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கம் மோசமாக அதிகரித்து செல்லக் கூடிய ஆபத்தான நிலமையே காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து யூலை மாதம் வரை டெங்கு நோயால் 40 பேர்  மரணம் அடைந்துள்ளதுடன் 27,088 பேர் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

நாட்டில் கொழுப்பு, கம்பஹா, காலி, அம்பாந்தோட்டை, கண்டி, களுத்துறை, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம் காணப்பட்டது. தற்போது யாழ். மாவட்டத்தில்  தான் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது இம் மாதம் 20ஆம் திதகி வரை 736 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ் வருடம் அதிகம் அதிகரித்து உள்ளது என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைவதும், பின்னர் நோய்த் தாக்கம் தணிந்து போவதும் வழமையாகும். டெங்கு காய்ச்சல் தீவிரமாகும் போது நாட்டில் விழிப்புணர்வு அதிகரிப்பதும், நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் விழிப்புணர்வு அலட்சியப்படுத்தப்படுவதும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான அலட்சியம் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் குறித்த காலப் பகுதியில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கின்றது. வருடம்தோறும் குறிப்பிட்ட காலப்பகுதியில் டெங்கு வேகமாக பரவுவதற்குக் காரணம் மழை ஆகும். ஆகவே தான் தற்காலத்தில் அதிகமாக மழை பெய்வதால் பல இடங்களில் நீர் தேங்கி நிற்பதனால் நுளம்புகள் பெருகி டெங்கு காய்ச்சலும் அதிகமாக சமீப தினங்களில் அதிகமாக பரவி  வருகின்றது.

எனவே இவ் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் முடிந்தவரை எமது சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருகாதபடி பேணுதல் வேண்டும். நுளம்புகளில் இருந்து முழுமையான பாதுகாப்புப் பெறுவது அவசியமானதாகும்.

வாக்களித்தலின் முக்கியத்துவம்

வாக்களிப்பு ஜனநாயக உரிமை
வாக்களித்தல் ஒவ்வொருவரதும் கடமை

      வாக்குரிமை என்பது பொது மற்றும் அரசியல் தேர்வுகளில் வாக்களிக்கும் உரிமை ஆகும். வாக்குரிமை தகுதி பெற்ற குடிமகன்களுக்கும், 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம்,  சட்டமன்றம், நகராட்சி மன்றம்,  உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றுக்கான உறுபிபனர்களைத் தேர்ந்தெடுப்பதற்க்கு தேர்தல்கள் நடைபெறுகின்றன. நாட்டின் குடிமக்கள் தங்கள் வாக்குகளை வழங்கிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு வாக்களிப்பதற்கு குடிமக்களுக்கு உள்ள உரிமையை வாக்குரிமை என்கிறோம்.

இத்தகைய வாக்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக அறிந்திருப்பது மிகவும் அவசியமானதாகும். அந்தவகையில் இது தொடர்பான கருத்து.


வாக்களித்தல் என்பது எங்களுக்காக நாங்கள் செய்ய வேண்டிய கடமை. நாங்கள் நேசிக்கும் நபர்களுக்காகவும், எங்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும், எங்களது நலனுக்காகவும் நாங்கள் வாக்களிக்கவில்லை என்றால் எங்களுக்காக யார் வாக்களிப்பது ?

மக்களால் மக்களுக்காக நடாத்தப்படுபவையே தேர்தலும் அரசாங்கமும். ஆதலால், வெறும் பார்வையாளர்களாக இருந்து குறை மட்டும் சொல்லாமல் நல்லாட்சியை பெறுவதற்கு நாங்களே களம் இறங்க வேண்டிய காலம்.

இன்று அனைத்தையும் விரல் நுனிக்குள் கொண்டு வந்து விட்டது இணையம். ஆகவே உங்களுக்கு இந்த நடைமுறைகள்  புரியவில்லை என்றால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நண்பர்களிடம், குடும்பத்தாரிடம் கேளுங்கள் , செய்தி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அறிந்து தெரிந்து கொண்டு உரிய செல்லுபடியாகும் வாக்கினை போடவும்.

தற்காலம் இளைஞர்கள் பலரும் வாக்களிப்பதில் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். ஆனால் இளமையை மட்டுமில்லாமல் உங்கள் எதிர்காலத்தையும் சேர்த்து யோசியுங்கள். வாக்களிப்பது உங்களது ஐனநாயக கடமை. நாங்கள் எடுக்கும் முடிவு எங்கள் எதிர்கால அரசின் மூலம் வெளிப்படும். ஆகவே இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். 

இன்றைய காலகட்டத்தில் பல நாடுகளில் அந்நாட்டு அரசாங்கத்தைத் தேர்தெடுப்பதற்கான வாய்ப்பு அந்நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. காரணம் அவர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. நமது முன்னோர்கள் போராடி பெற்ற உரிமை தான் வாக்குரிமை. இந்த உரிமைகளை நாம் பாராட்டி நாமாக முன்வந்து நம் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்.

  எனவே இந் நாட்டின் பிரஜை என்ற வகையில் எமக்கு இருக்கும் உரிமையை சரிவர  செய்து நம் நாட்டின் நல்லாட்சிக்கு உறுதுணையாக இருப்போம்.

                         

 ஈரான்🇮🇷- இலங்கை🇱🇰 நட்புறவு திரைப்பட விழா   

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஈரான்- இலங்கை நட்புறவு திரைப்பட விழா   

யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் ஈரானிய பண்பாட்டு நிலையத்தின் அனுசரணையுடன் ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் நவம்பர் மாதம் 8ம் 9ம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி  கலையரங்கில் இடம்பெற்றது. 
நவம்பர் 8ம் திகதி  காலை 10மணியளவில் கலைப்பீட பீடாதிபதி  கலாநிதி கே. சுதாகர்  நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து  ஈரானிய பண்பாட்டு நிலையத்தின்  அலுவலர் மகாகமகே அவர்களும், சிரேஸ்ட எழுத்தாளர் யேசுராஜா  அவர்களும் உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து  சர்வதேச விருதுபெற்ற "ராணாவின் மௌனம் " என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்பட நிறைவில் திரைப்படம் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
8ம் திகதி மாலை 3 மணியளவில்            "வீ காவ் எ கெஸ்ற் " என்ற திரைப்படமும் திரையிடப்பட்டது.
9ம் திகதி காலை 10மணியளவில் "கொக்கற்ரி" என்ற திரைப்படமும் மாலை 3மணியளவில் " சீசன் ஒவ் நர்கீஸ்"  என்ற திரைப்படமும் திரையிடப்பட்டது. ஒவ்வொரு திரைப்படத்தின் இறுதியிலும் அவை பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
இத்திரைப்பட விழாவில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் ,பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், திரைப்பட ஆர்வலர்கள்  என்போர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பாக்.வீரர்கள் 10 பேருக்கு கொரோனா; சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 10 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்...