யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மூன்றாம் வருட மாணவர்களின் கனலி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு 02.11.2019 அன்று யாழ்.பல்கலைக்கழக நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி.கே.சுதாகர் அவர்களும் கலந்துகொண்டனர்.
கனலி சஞ்சிகையின் முதற் பிரதியை சிரேஷ்ட ஊடகவியலாளர் இராதேயன் அவர்கள் வெளியிட்டு வைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment